உழைப்போம்

Monday, December 30, 2013

தமிழகத்தில் 'இலவச சிஎப்எல் பல்பு' உள்பட ரூ.519 கோடி மின் திட்டங்கள் துவக்கம்.

குடிசை மின் இணைப்பு நுகர்வோருக்கு இலவச சிஎப்எல் பல்பு வழங்குவது உள்பட ரூ.519 கோடி மதிப்பிலான மின் திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கிவைத்தார்.

Saturday, December 28, 2013

சென்னையில் மெட்ரோ ரயிலுக்காக புதிதாக 3 துணை மின் நிலையங்கள்- தி இந்து

மெட்ரோ ரயில் இயக்கத்துக்காகவும் வடசென்னை புதிய மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை விநியோகிக்கவும் சென்னையில் 3 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை மாநகருக்கு தினமும் 2,500 முதல் 3,000 மெகாவாட் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. பல இடங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விரைவில் முடிவுக்கு வந்து, முதல்கட்டமாக வரும் ஜூனில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் இயக்கம், பணிமனை மற்றும் மெட்ரோ ரயில் தொழில்நுட்பக் கூடப் பணிகள் ஆகியவற்றுக்கு தினமும் 300 முதல் 800 மெகாவாட் வரை கூடுதலாக மின்சாரம் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வடசென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலா 600 மெகாவாட் திறனுடன் கொண்ட இரண்டு அலகுகள் கொண்ட 1,200 மெகாவாட் மின் நிலையம், விரைவில் வணிக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்க உள்ளது. தற்போது இந்த மின் நிலையத்தில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை சீராக விநியோகிக்கவும், மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு தேவைப்படும் அதிக மின்சாரத்தை வழங்கவும் சென்னை நகரில் கூடுதலாக துணை மின் நிலையங்கள் மற்றும் மின்னூட்டி பாதைகள் தேவைப்படுகின்றன.

மேட்டூர் புதிய அனல்மின் நிலையம் மீண்டும் செயல்பட தொடக்கம்

600 மெகா வாட் திறன் கொண்ட மேட்டூர் புதிய அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

Thursday, December 19, 2013

ரூ.15க்கு சி.எப்.எல்., பல்ப் விற்க மின் வாரியம் முடிவு-தினமலர் செய்தி

குடிசை மின் இணைப்புகளுக்கு, ஒரு பல்ப், 15 ரூபாய் என்ற விலையில், சி.எப்.எல்., பல்புகளை விற்பனை செய்ய, தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், தினசரி, 250 மெகாவாட் மின்சாரம் சேமிக்க முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, December 11, 2013

மின்சார வாரியத்தில் காலியிடங்கள் நிரப்ப பதிவு மூப்பை செயல்படுத்த பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை தினமலர் செய்தி.

சேலம்: தமிழ்நாடு மின்சார வாரியத்தில், உதவி பொறியாளர், தொழில் நுட்ப உதவியாளர், கணக்கீட்டாளர், உதவியாளர் என, 6,400 பணியிடங்களை, வாய்வழி தேர்வு, அரசியல் கட்சியினர் பரிந்துரை மூலம் நியமிப்பதற்கு, மின்வாரிய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Saturday, December 7, 2013

மின் கணக்கீட்டில் முறைகேடுகளை தடுக்க வருகிறது ரிமோட் மீட்டர்கள் : தமிழக மின்வாரியம் அதிரடி திட்டம் மின் கணக்கீட்டில் முறைகேடுகளை தடுக்க வருகிறது ரிமோட் மீட்டர்கள் : தமிழக மின்வாரியம் அதிரடி திட்டம் பாரதிய மஸ்தூர் மின் ஊழியர் சம்மேளனத்தின் செயல் தலைவர் முரளி கிருஷ்ணன் கருத்து.

முறைகேடுகள் மற்றும் வருவாய் இழப்பைத் தடுக்கும் வகையில், புதிய ஸ்மார்ட் ரிமோட் மீட்டர்களை பொருத்த தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால், ஆண்டுக்கு ரூ.1,000 கோடி ரூபாய் இழப்பைத் தடுக்க முடியும் என்று மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Friday, November 29, 2013

TECHNICAL ASSISTANT/ELECTRICAL& MECHANICAL DIRECT RECRUITMENT THROUGH EMPLOYMENT EXCHANGE AND APPRENTICESHIP CANDIDATES IN TANGEDCO LTD

TECHNICAL ASSISTANT/ELECTRICAL& MECHANICAL DIRECT RECRUITMENT THROUGH EMPLOYMENT EXCHANGE AND APPRENTICESHIP CANDIDATES IN TANGEDCO LTD
ELECTRICAL:
SL.NO CENTRE DOWNLOAD
 1.
 CHENNAI
 List by Employment Exchange
 2.
 COIMBATORE
 List by Employment Exchange
3.
 CUDDALORE
 List by Employment Exchange
4.
DHARMAPURI
List by Employment Exchange
5.
ERODE
List by Employment Exchange
6.
KANYAKUMARI
List by Employment Exchange
7.
MADURAI
List by Employment Exchange
8.
THANJAVUR
List by Employment Exchange
9.
THENI
List by Employment Exchange
10.
THIRUVANNAMALAIList by Employment Exchange
11.
TIRUNELVELI
List by Employment Exchange
12.
TRICHY
List by Employment Exchange
13.
VELLORE
List by Employment Exchange
14.
VILLUPURAM
List by Employment Exchange
TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED

Monday, November 25, 2013

கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை உத்தேச பணி மூப்பு பட்டியல் வெளியீடு.

கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை உத்தேச பணி  மூப்பு  பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. இதில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் 20.12.2013 குள் தங்கள் விவரங்களை அனுப்பி வைக்க கேட்டுகொள்ளப்பட்டுள்ளர்கள்.

view in word doc.                  Download in word doc

View in seniority List             Download in Seniority List

Friday, November 22, 2013

கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் பெயர் பட்டியல் மற்றும் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

நெய்வேலி புதிய மின் நிலைய பணிகளை முடிக்க மத்திய மின்சார ஆணையம் காலக்கெடு-தி இந்து செய்தி

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் புதிதாகக் கட்டப்படும், 500 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையப் பணிகளை கோடை காலத்திற்குள் முடிக்குமாறு, தமிழக மின் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tuesday, November 12, 2013

முகரம் பண்டிகை விடுமுறை தேதி - மின் வாரிய ஆணை வெளியிடப்பட்டது.

 மின் வாரிய ஆணை படிக்க  பதிவிறக்கம் செய்ய

புதிய வேலை பளு சம்பந்தமாக மின் வாரிய தொழிற்சங்கங்களுடனான பேச்சு வார்த்தை தேதி மாற்றப்பட்டுள்ளது

புதிய வேலை பளு சம்பந்தமாக மின் வாரிய தொழிற்சங்கங்களுடனான பேச்சு வார்த்தை தேதி மாற்றப்பட்டுள்ளது . வாரிய ஆணையை
படிக்க    பதிவிறக்கம் செய்ய

மின்சார வாரியத்தில் முதல் முறையாகதொழிற்சங்கங்களுடன் தொடர் பேச்சுவார்த்தை-தினமலர் செய்தி

மின் ஊழியர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற, மின்சார வாரியத்தில், முதல் முறையாக, தொழிற்சங்கங்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில், தொழில்நுட்ப உதவியாளர், கணக்கீட்டாளர், உதவி பொறியாளர் என, 80 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஊழியர்கள் நலன், பதவி உயர்வு, பணி நியமனம், பணி நிலைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள், மின் வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் அரசிடம் முறையீடு செய்து வருகின்றனர்.

WAGE REVISION COMMITTEE'S REVISED PROPOSAL ON WORK NORMS

Monday, November 11, 2013

மொஹரம் விடுமுறை தேதி மாற்றம்! தமிழக அரசு அறிவிப்பு.

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று மொஹரம். இந்த பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு, நவம்பர் 14ஆம் தேதி விடுமுறை என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
                            ஆனால், பிறை தென்படாத காரணத்தினால் நவம்பர் 15ஆம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசும், மொஹரம் பண்டிகை முன்னிட்டு நவம்பர் 15ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவித்துள்ளது.

Thursday, November 7, 2013

மின் வாரியத்தில் 6,000 பேர் நியமனம் - தின மலர் செய்தி.

மின்சார வாரியத்தில், புதிதாக, 6,000 பேரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியான நபர்கள், நேர்காணலில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதம் விரைவில் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில், கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவி பொறியாளர் என, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தற்போது, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மின் உற்பத்தி, வினியோகம், பராமரிப்பு, மின் கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதில், தொடர் சிக்கல் நிலவுகிறது. இதையடுத்து, புதிதாக, 4,000 கள உதவியாளர்; 1,000 கணக்கீட்டாளர்; 275 உதவி பொறியாளர்; 1,000 தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட, 6,275 பணி இடங்கள், இந்த மாதம் மற்றும் அடுத்த மாதத்திற்குள் நிரப்ப, மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. ஒரு பதவிக்கு, ஐந்து நபர் என்ற அடிப்படையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டியல் பெறப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. அதன் அடிப்படை யில், தகுதியான நபரை, நேர்காணலுக்கு அழைக்க, விரைவில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட உள்ளது. மின்சார வாரியத்தில், 'அப்ரென்டிஸ்ஷிப்' பயிற்சி முடித்தவர்கள், நேர்காணலில் பங்கேற்க, நேரடியாக அழைப்பு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறுகையில், 'பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால், மூன்று, நான்கு பேர் செய்ய வேண்டிய வேலைகளை, ஒருவர் செய்ய வேண்டியுள்ளது. நடப்பாண்டில், 'அப்ரென்டிஸ்ஷிப்' முடித்த பட்டம் மற்றும் பட்டய பொறியாளர்களையும், நேர்காணலுக்கு அழைக்க வேண்டும்' என்றனர்.

'பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்':

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்வி, கூடுதல் தகுதி போன்றவற்றின் அடிப்படையில் தான், புதிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, அமைச்சர், அமைச்சர் உதவியாளர், எம்.எல்.ஏ., அவரின் உதவியாளர், அரசியல் பிரமுகர்கள், இடைத்தரகரகள் என, யாரிடமும் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாராவது, 'பணம் கொடுங்கள்; வேலை வாங்கி தருகிறேன்' என்று சொன்னால், முதல்வர் தனி பிரிவில் புகார் செய்யுங்கள். இவ்வாறு, அவர் கூறினார்.

Saturday, November 2, 2013

தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்

தீபங்கள் 
ஒளிர்வதைக் கண்டு 
தீய 
எண்ணங்கள் மறையட்டும்.! 

உறவுகள் 
கூடி மகிழ்வதைக் கண்டு 
உள்ளத்தில் 
உற்சாகம் பெருகட்டும்.! 

இனிப்புகள் 
உண்பதைக் கண்டு 
இன்று போல் 
இன்பங்கள் நிலைக்கட்டும்! 

பண்டிகை 
திருநாளில் பகை மறந்து 
பந்த பாசங்கள் 
பசுமையாய் வளரட்டும்.! 

சகல 
சந்தோசமும் ஒன்று கூடி 
சமத்துவம் மலர்ந்து 
சகோதரத்துவம் உண்டாகட்டும்.! 


(நன்றி   எழுத்து .காம் )

Thursday, October 31, 2013

மின் கட்டணம் குறித்து குறுந்தகவல் அனுப்பும் திட்டத்தை ஊத்தங்கரை மின் வாரியம் அமல்படுத்தியுள்ளது.

தினமணி செய்தி : மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் குறித்து மின் நுகர்வோர்களுக்கு குறுந்தகவல் அனுப்பும் திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஊத்தங்கரை மின் வாரியம் அமல்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மின் வாரிய பொறியாளர் சின்னதம்பி கூறியது:
ஊத்தங்கரை மின் வாரியம் மூலம் பயன் பெறும் நுகர்வோர்கள் தங்கள் வீடு, கடைகளில் பயன்படுத்திய மின் அளவு, கட்டணம் செலுத்தும் தேதி ஆகியவை குறித்து அவர்களின் கைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.
இந்த வசதியை அனைத்து நுகர்வோர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர். 

Sunday, October 27, 2013

விரைவில் 24 மணி நேர சீரான மின்சாரம்* சட்டசபையில் ஜெ., உறுதி (தினமலர் செய்தி)

சென்னை:”தொழில் கூடங்கள், விவசாயம் மற்றும் வீட்டு இணைப்புகள் என, அனைவருக்கும், 24 மணி நேரமும் சீரான மின்சாரம் கிடைக்கும் சூழலை, மிக விரைவில் உருவாக்கிக் காட்டுவோம்,'' என, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.

Friday, October 25, 2013

புதிய அனல் மின் நிலையங்களை துவக்குவதில் அரசு தீவிரம். தினமலர் செய்தி.

செய்யூர், உடன்குடி அனல் மின் நிலைய திட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ள, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள, முன்னணி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

100 மையங்களில் தானியங்கி மின்கட்டண வசூல் எந்திரங்கள்-தின மணி செய்தி.

தமிழகம் முழுவதும் 100 மையங்களில் தானியங்கி மின் கட்டண வசூல் எந்திரம் (ATPM-Any Time Payment Machine) அமைக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

மாதாந்திர மின் கட்டணம் குறித்த எஸ்.எம்.எஸ்., நுகர்வோருக்கு மொபைலில் அனுப்ப முடிவு தினமலர் செய்தி

மேட்டூர்: மாதம் தோறும் செலுத்த வேண்டிய மின் கட்டணம் குறித்த தகவலை, சம்பந்தபட்ட நுகர்வோரின் மொபைலில், குறுந்தகவலான, எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்ப மின் கழகம் முடிவு செய்துள்ளது.

Thursday, October 24, 2013

பகுதிநேர பணியாளர் அகவிலைப்படி 80 லிருந்து 90 சதவீதமாக உயர்த்தி ஆணை வெளியீடு

jkpH;ehL kpd; cw;gj;jp kw;Wk; gfph;khd fHfk;
( RUf;fk; )

gofs;  giHa Cjpa tpfpjj;jpy; mftpiyg;go- 1-7-2013 Kjw;bfhz;L                  cah;j;jg;gl;l mftpiyg;go tPjk; - Mizfs; - btspaplg;gLfpwJ.

தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வருகிறது மின் கட்டணம் எவ்வளவு என்பதை செல்போனில் தெரிந்து கொள்ளும் வசதி

தமிழகத்தில் மின் கட்டணம் எவ்வளவு என்பதை இனிமேல் செல்போனில் தெரிந்து கொள்ளும் வசதியை மின்வாரியம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக தங்களது செல்போன் எண்ணை அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பதிவு செய்தால் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) மூலம் தகவல் தரப்படும்.

மின் விபத்துக்களை தவிர்க்கமின் வாரியம் எச்சரிக்கை.- தினமலர் செய்தி.

 பருவமழையின் போது மின் விபத்துகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் விபத்து குறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய அலுவலர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.தர்மபுரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நடராஜன் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. பருவமழை காலங்களின் போது வீசும் காற்றினால் மரங்கள் விழுவது உள்ளிட்ட பல்வேறு 

Tuesday, October 22, 2013

Bonus and Ex-gratia to workmen of TANGEDO for the year 2012-13 orders

Bonus and Ex-gratia to workmen of TANGEDO

பார்க்க               பதிவிறக்கம் பண்ண

இந்தியாவில் மின் இணைப்பு பெற 67 நாட்கள் ஆகின்றது: உலக வங்கி ஆய்வில் தகவல். மலை மலர் செய்தி

இந்தியாவில் ஒரு வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்கு 67 நாட்களாகின்றது என்று உலக வங்கி தங்களுடைய வர்த்தகம் குறித்த 2013 ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில்

மின் நுகர்வோர் 10 நாட்களுக்குள், தங்கள் மொபைல் எண்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்-திருப்பூர் கோட்ட பொறியாளர்.(தினமலர் செய்தி )

திருப்பூர் மின் கோட்டத்தில், 2.30 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. பழைய முறையில் மின் கட்டணம் "ரீடிங்' எடுக்கும் தேதி, மின் கட்டணம் செலுத்த வேண்டிய தேதி ஒரே மாதிரியாக இருந்தது. மாதத்தின் முதல் தேதியில் இருந்து 15ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தப் பட்டது. தற்போது, மின் உபயோகம் குறித்து "ரீடிங்' எடுத்த தேதியில் இருந்து, 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டிய நடைமுறை உள்ளது.
மின் பணியாளர்கள் வரும்போது, உரிமையாளர்கள் இல்லாதது, பணி பளு காரணங்களால் பெரும்பாலானோருக்கு மின் உபயோக "ரீடிங்' எடுக்கப்படுவது, செலுத்த வேண்டிய கடைசி தேதி தெரிவதில்லை. 
அபராதம், மின் துண்டிப்பு போன்ற சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், மின்வாரியம் சார்பில் எஸ்.எம்.எஸ்., மூலம் அறிவிக்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இவ்வசதி வேண்டுவோர், மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் போன் எண், லேன்ட் லைன் எண்களை பதிவு செய்தால், மின் கட்டணம், கடைசி தேதி குறித்து, "அலார்ட்' எஸ்.எம்.எஸ்., வரும்.கோட்ட பொறியாளர் சுப்ரமணியம் கூறியதாவது:
மின் நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, பிரிவு அலுவலகங்கள், மின் கட்டணம் செலுத்தும் அலுவலங்கங்கள், இயந்திரங்கள் அமைந்துள்ள பகுதிகளில், மின் நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண், மொபைல் போன் அல்லது லேன்ட் லைன் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். தங்களது தொடர்பு எண்களை, மின் நுகர்வோர் பதிவு செய்ததும், திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். எனவே, மின் நுகர்வோர் 10 நாட்களுக்குள், தங்கள் மொபைல் எண்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.