உழைப்போம்

Monday, December 30, 2013

தமிழகத்தில் 'இலவச சிஎப்எல் பல்பு' உள்பட ரூ.519 கோடி மின் திட்டங்கள் துவக்கம்.

குடிசை மின் இணைப்பு நுகர்வோருக்கு இலவச சிஎப்எல் பல்பு வழங்குவது உள்பட ரூ.519 கோடி மதிப்பிலான மின் திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கிவைத்தார்.

Saturday, December 28, 2013

சென்னையில் மெட்ரோ ரயிலுக்காக புதிதாக 3 துணை மின் நிலையங்கள்- தி இந்து

மெட்ரோ ரயில் இயக்கத்துக்காகவும் வடசென்னை புதிய மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை விநியோகிக்கவும் சென்னையில் 3 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை மாநகருக்கு தினமும் 2,500 முதல் 3,000 மெகாவாட் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. பல இடங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விரைவில் முடிவுக்கு வந்து, முதல்கட்டமாக வரும் ஜூனில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் இயக்கம், பணிமனை மற்றும் மெட்ரோ ரயில் தொழில்நுட்பக் கூடப் பணிகள் ஆகியவற்றுக்கு தினமும் 300 முதல் 800 மெகாவாட் வரை கூடுதலாக மின்சாரம் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வடசென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலா 600 மெகாவாட் திறனுடன் கொண்ட இரண்டு அலகுகள் கொண்ட 1,200 மெகாவாட் மின் நிலையம், விரைவில் வணிக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்க உள்ளது. தற்போது இந்த மின் நிலையத்தில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை சீராக விநியோகிக்கவும், மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு தேவைப்படும் அதிக மின்சாரத்தை வழங்கவும் சென்னை நகரில் கூடுதலாக துணை மின் நிலையங்கள் மற்றும் மின்னூட்டி பாதைகள் தேவைப்படுகின்றன.

மேட்டூர் புதிய அனல்மின் நிலையம் மீண்டும் செயல்பட தொடக்கம்

600 மெகா வாட் திறன் கொண்ட மேட்டூர் புதிய அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

Thursday, December 19, 2013

ரூ.15க்கு சி.எப்.எல்., பல்ப் விற்க மின் வாரியம் முடிவு-தினமலர் செய்தி

குடிசை மின் இணைப்புகளுக்கு, ஒரு பல்ப், 15 ரூபாய் என்ற விலையில், சி.எப்.எல்., பல்புகளை விற்பனை செய்ய, தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், தினசரி, 250 மெகாவாட் மின்சாரம் சேமிக்க முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, December 11, 2013

மின்சார வாரியத்தில் காலியிடங்கள் நிரப்ப பதிவு மூப்பை செயல்படுத்த பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை தினமலர் செய்தி.

சேலம்: தமிழ்நாடு மின்சார வாரியத்தில், உதவி பொறியாளர், தொழில் நுட்ப உதவியாளர், கணக்கீட்டாளர், உதவியாளர் என, 6,400 பணியிடங்களை, வாய்வழி தேர்வு, அரசியல் கட்சியினர் பரிந்துரை மூலம் நியமிப்பதற்கு, மின்வாரிய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Saturday, December 7, 2013

மின் கணக்கீட்டில் முறைகேடுகளை தடுக்க வருகிறது ரிமோட் மீட்டர்கள் : தமிழக மின்வாரியம் அதிரடி திட்டம் மின் கணக்கீட்டில் முறைகேடுகளை தடுக்க வருகிறது ரிமோட் மீட்டர்கள் : தமிழக மின்வாரியம் அதிரடி திட்டம் பாரதிய மஸ்தூர் மின் ஊழியர் சம்மேளனத்தின் செயல் தலைவர் முரளி கிருஷ்ணன் கருத்து.

முறைகேடுகள் மற்றும் வருவாய் இழப்பைத் தடுக்கும் வகையில், புதிய ஸ்மார்ட் ரிமோட் மீட்டர்களை பொருத்த தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால், ஆண்டுக்கு ரூ.1,000 கோடி ரூபாய் இழப்பைத் தடுக்க முடியும் என்று மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.