உழைப்போம்

Sunday, October 13, 2013

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பரிந்துரை

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில்,சென்னை தமிழ்நாடு மின்சாரவாரிய முதன்மைப்பொறியாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மின்சார வாரியத்தில் கணக்கீட்டாளர் நிலை-2 காலிப்பணியிடங்க ளுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது
.
 இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 2013 ஜனவரி-1 அன்று அருந்ததியினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் 35 வயதுக்கு மிகாமலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம் ஆகியோர் 32 வயதுக்கு மிகாமலும், பகிரங்கப் போட்டியாளர் 30 வயதுக்கு மிகாமலும் இருக்கவேண்டும். வேலையளிப்போரால் இப்பணிக்கு வயதுவரம்பு தளர்வு அளிக்கப்படவில்லை.

 பதிவு மூப்பு விபரம்: மாற்றுத்திறனாளிகள் பொது 23.7.1986 வரை, பெண்கள்- பழங்குடியினர் 24.6.1994 வரை, அருந்ததியினர் 29.6.1993 வரை, தாழ்த்தப்பட்டோர் 25.6.1993 வரை, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 21.6.1996 வரை, பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம் 24.6.1996 வரை, இதர பிற்பட்ட வகுப்பினர் 20.6.1996 வரை, பகிரங்கப் போட்டியாளர் 29.6.1993 வரை, பொது பிரிவு- பழங்குடியினர் 23.6.1994 வரை, அருந்ததியினர் 5.7.1993 வரை, தாழ்த்தப்பட்டவர்கள் 25.6.1993 வரை, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 21.6.1996 வரை, பிற்பட்ட வகுப்பினர் முஸ்லிம் 24.6.1996 வரை, இதர பிற்பட்ட வகுப்பினர் 21.6.1996 வரை, பகிரங்கப்போட்டியாளர் 2.7.1993 வரை.
 மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதி, பதிவு மூப்பு மற்றும் பிறந்த தேதி உடைய மனுதாரர்கள் அனைத்து கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஒளிநகலுடன் 15.10.2013 அன்று முற்பகல் 11 மணிக்கு தங்களின் பதிவு விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள ஏதுவாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பெ.ம. பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக எந்தவித பயணப்படியும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment