உழைப்போம்

Thursday, October 31, 2013

மின் கட்டணம் குறித்து குறுந்தகவல் அனுப்பும் திட்டத்தை ஊத்தங்கரை மின் வாரியம் அமல்படுத்தியுள்ளது.

தினமணி செய்தி : மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் குறித்து மின் நுகர்வோர்களுக்கு குறுந்தகவல் அனுப்பும் திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஊத்தங்கரை மின் வாரியம் அமல்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மின் வாரிய பொறியாளர் சின்னதம்பி கூறியது:
ஊத்தங்கரை மின் வாரியம் மூலம் பயன் பெறும் நுகர்வோர்கள் தங்கள் வீடு, கடைகளில் பயன்படுத்திய மின் அளவு, கட்டணம் செலுத்தும் தேதி ஆகியவை குறித்து அவர்களின் கைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.
இந்த வசதியை அனைத்து நுகர்வோர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர். 

No comments :

Post a Comment