உழைப்போம்

Monday, October 7, 2013

பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் மாபெரும் ஆர்ப்பாட்டம் .

சென்னையில் 05.10.2013 அன்று 05.05 மணி அளவில் தமிழ் நாடு மின் வாரிய அலுவலகத்தின்  நுழைவு வாயில் கூட்டம்  பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில செயலாளர் திரு சந்திரன் அவர்கள் தலைமை வகித்தார் .  
     சிறப்பு விருந்தினராக பாரதீய மஸ்தூர் சம்மேளனத்தின் அகில பாரத செயலாளர் திரு துரைராஜ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு உரை ஆற்றினார்.
4500 பயிற்சி  மஸ்தூர் அவர்களின்  வேதனைகளை , அவர்கள் படும் கஷ்டங்களையும் சேலம் மஸ்தூர்  பயிற்சி திரு ராஜூ அவர்கள் எடுத்து கூறினார்.அதே போல் கணக்கீட்டாளர்கள் இரண்டாம் நிலை பணியாளர்களை கணக்கீட்டாளர்கள் முதல் நிலையாக பதவி வழங்க வேண்டும் என  அருணாசலம்  முசுரி அவர்கள் கோரிக்கை விடுத்தார்.
                         பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் திரு முரளி கிருஷ்ணன்  அவர்கள் உரை ஆற்றும்போது தமிழக சட்டசபையில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவித்தபடி பயிற்சி மஸ்தூர் அவர்களுக்கு உடனடியாக கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறித்தினார் .
ஒரே வேலை  இரு வேறு சம்பளம் என்பதை மாற்றி அணைத்து கணக்கீட்டாளர்கள் இரண்டாம் நிலை பணியாளர்களை கணக்கீட்டாளர்கள் முதல் நிலையாக பதவி வழங்க வேண்டும்,
கம்பியாளர் பதவி உயர்வை பாதிக்கும் இரட்டை வழி பதவி உயர்வை ரத்து  செய்ய வேண்டும்.
மின் வாரிய  உழியர்களின் பென்ஷன் பொறுப்பை தமிழக அரசே ஏற்க்கவேண்டும்,
மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.
அணைத்து பிரிவு பணியாளர்களுக்காகவும் பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் பாடுபடும் என்று உறுதி கூறினார்.

No comments :

Post a Comment