மின் வாரிய ஆணை படிக்க பதிவிறக்கம் செய்ய
உழைப்போம் !.................................................. உரிமையைப் பெறுவோம் !.................................................. உயர்வோம் !
Tuesday, November 12, 2013
புதிய வேலை பளு சம்பந்தமாக மின் வாரிய தொழிற்சங்கங்களுடனான பேச்சு வார்த்தை தேதி மாற்றப்பட்டுள்ளது
புதிய வேலை பளு சம்பந்தமாக மின் வாரிய தொழிற்சங்கங்களுடனான பேச்சு வார்த்தை தேதி மாற்றப்பட்டுள்ளது . வாரிய ஆணையை
படிக்க பதிவிறக்கம் செய்ய
படிக்க பதிவிறக்கம் செய்ய
லேபிள்கள்:
தமிழக அரசு செய்திகள்
,
நாளிதழ் செய்திகள்
,
வாரிய செய்திகள்
மின்சார வாரியத்தில் முதல் முறையாகதொழிற்சங்கங்களுடன் தொடர் பேச்சுவார்த்தை-தினமலர் செய்தி
மின் ஊழியர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற, மின்சார வாரியத்தில், முதல் முறையாக, தொழிற்சங்கங்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில், தொழில்நுட்ப உதவியாளர், கணக்கீட்டாளர், உதவி பொறியாளர் என, 80 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஊழியர்கள் நலன், பதவி உயர்வு, பணி நியமனம், பணி நிலைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள், மின் வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் அரசிடம் முறையீடு செய்து வருகின்றனர்.
லேபிள்கள்:
BMS செய்திகள்
,
தமிழக அரசு செய்திகள்
,
நாளிதழ் செய்திகள்
,
வாரிய செய்திகள்
Monday, November 11, 2013
மொஹரம் விடுமுறை தேதி மாற்றம்! தமிழக அரசு அறிவிப்பு.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று மொஹரம். இந்த பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு, நவம்பர் 14ஆம் தேதி விடுமுறை என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால், பிறை தென்படாத காரணத்தினால் நவம்பர் 15ஆம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசும், மொஹரம் பண்டிகை முன்னிட்டு நவம்பர் 15ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவித்துள்ளது.
ஆனால், பிறை தென்படாத காரணத்தினால் நவம்பர் 15ஆம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசும், மொஹரம் பண்டிகை முன்னிட்டு நவம்பர் 15ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவித்துள்ளது.
லேபிள்கள்:
தமிழக அரசு செய்திகள்
,
நாளிதழ் செய்திகள்
,
வாரிய செய்திகள்
Thursday, November 7, 2013
மின் வாரியத்தில் 6,000 பேர் நியமனம் - தின மலர் செய்தி.
மின்சார வாரியத்தில், புதிதாக, 6,000 பேரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியான நபர்கள், நேர்காணலில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதம் விரைவில் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில், கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவி பொறியாளர் என, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தற்போது, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மின் உற்பத்தி, வினியோகம், பராமரிப்பு, மின் கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதில், தொடர் சிக்கல் நிலவுகிறது. இதையடுத்து, புதிதாக, 4,000 கள உதவியாளர்; 1,000 கணக்கீட்டாளர்; 275 உதவி பொறியாளர்; 1,000 தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட, 6,275 பணி இடங்கள், இந்த மாதம் மற்றும் அடுத்த மாதத்திற்குள் நிரப்ப, மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. ஒரு பதவிக்கு, ஐந்து நபர் என்ற அடிப்படையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டியல் பெறப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. அதன் அடிப்படை யில், தகுதியான நபரை, நேர்காணலுக்கு அழைக்க, விரைவில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட உள்ளது. மின்சார வாரியத்தில், 'அப்ரென்டிஸ்ஷிப்' பயிற்சி முடித்தவர்கள், நேர்காணலில் பங்கேற்க, நேரடியாக அழைப்பு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறுகையில், 'பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால், மூன்று, நான்கு பேர் செய்ய வேண்டிய வேலைகளை, ஒருவர் செய்ய வேண்டியுள்ளது. நடப்பாண்டில், 'அப்ரென்டிஸ்ஷிப்' முடித்த பட்டம் மற்றும் பட்டய பொறியாளர்களையும், நேர்காணலுக்கு அழைக்க வேண்டும்' என்றனர்.
'பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்':
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்வி, கூடுதல் தகுதி போன்றவற்றின் அடிப்படையில் தான், புதிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, அமைச்சர், அமைச்சர் உதவியாளர், எம்.எல்.ஏ., அவரின் உதவியாளர், அரசியல் பிரமுகர்கள், இடைத்தரகரகள் என, யாரிடமும் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாராவது, 'பணம் கொடுங்கள்; வேலை வாங்கி தருகிறேன்' என்று சொன்னால், முதல்வர் தனி பிரிவில் புகார் செய்யுங்கள். இவ்வாறு, அவர் கூறினார்.
லேபிள்கள்:
Appointment
,
கணக்கீட்டாளர்
,
கள உதவியாளர் .
,
நாளிதழ் செய்திகள்
,
வாரிய செய்திகள்
Tuesday, November 5, 2013
Saturday, November 2, 2013
தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்
தீபங்கள்
ஒளிர்வதைக் கண்டு
தீய
எண்ணங்கள் மறையட்டும்.!
உறவுகள்
கூடி மகிழ்வதைக் கண்டு
உள்ளத்தில்
உற்சாகம் பெருகட்டும்.!
இனிப்புகள்
உண்பதைக் கண்டு
இன்று போல்
இன்பங்கள் நிலைக்கட்டும்!
பண்டிகை
திருநாளில் பகை மறந்து
பந்த பாசங்கள்
பசுமையாய் வளரட்டும்.!
சகல
சந்தோசமும் ஒன்று கூடி
சமத்துவம் மலர்ந்து
சகோதரத்துவம் உண்டாகட்டும்.!
(நன்றி எழுத்து .காம் )
Thursday, October 31, 2013
மின் கட்டணம் குறித்து குறுந்தகவல் அனுப்பும் திட்டத்தை ஊத்தங்கரை மின் வாரியம் அமல்படுத்தியுள்ளது.
தினமணி செய்தி : மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் குறித்து மின் நுகர்வோர்களுக்கு குறுந்தகவல் அனுப்பும் திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மின் வாரியம் அமல்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மின் வாரிய பொறியாளர் சின்னதம்பி கூறியது:
ஊத்தங்கரை மின் வாரியம் மூலம் பயன் பெறும் நுகர்வோர்கள் தங்கள் வீடு, கடைகளில் பயன்படுத்திய மின் அளவு, கட்டணம் செலுத்தும் தேதி ஆகியவை குறித்து அவர்களின் கைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.
இந்த வசதியை அனைத்து நுகர்வோர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.
Subscribe to:
Posts
(
Atom
)