உழைப்போம்

Saturday, December 28, 2013

மேட்டூர் புதிய அனல்மின் நிலையம் மீண்டும் செயல்பட தொடக்கம்

600 மெகா வாட் திறன் கொண்ட மேட்டூர் புதிய அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

கடந்த 25-ஆம் தேதி ஸ்டீரீம் பகுதியில் அதிக அழுத்தம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த கோளாறை சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
கடந்த மூன்று நாட்களாக நடந்த பராமரிப்பு பணிகளின் வாயிலாக இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மேட்டூர் புதிய அனல்மின் நிலையம் இன்று காலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதனையடுத்து இன்று இரவுக்குள், மின் உற்பத்தி தொடங்கும் என்று கூறப்படுகிறது.

No comments :

Post a Comment